வவுனியாவில் அரிசி ஆலை தொடர்பில் செய்தியை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

700

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்..

அரிசி ஆலை ஓன்றில் அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் செய்தியை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு அ ச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அண்மையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டு குறித்த அரிசி ஆலைக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இச் சம்பவத்தை ஊடக அறிக்கையிட்ட ஊடகவியலாளரை மிரட்டும் வகையில் குறித்த அரிசி ஆலை உரிமையாளரால் அரச அதிகாரிகள் முன்னிலையில் அ ச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மி ரட்டல் தொடர்பில் ஊடகவியலாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.