கொழும்பில் உயிரிழந்த பெண்ணால் அனைவருக்கும் சோதனை!!

421

சோதனை..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று 9 ஆவது மரணம் பதிவாகியிருந்தது. கொழும்பு 15 மோதரை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கி பழகியவர்கள் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா,

குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதில் பிரச்சினையுள்ளதாக கூறியுள்ளார்.

அது தொடர்பில் இன்றைய தினத்திற்குள் கண்டறிவதாக தெரிவித்த அவர் அவ்வாறு கண்டறிய முடியாவிடின் அந்த பகுதியில் உள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.