ஏப்ரல் மாதம்..
ஏப்ரல் மாதம் முழுமையாக சேவைகளை பெற்றுக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் ஆணையாளர் ஆர்.ஜீ.ஏ. விமலவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், அது குறித்து தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகத்திற்கு செல்லாது வீட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவ தொடர்பான யோசனை ஒன்றை தொழில் அமைச்சு முன்வைக்க உள்ளது.
அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளான தனியார் நிறுவனங்கள் சம்பந்தமான தகவல்களை வழங்கும் கால அவகாசம் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் கடந்த 3 ஆம் திகதி முடிவடையவிருந்தது.
-தமிழ்வின்-