உடலுக்கு தீ வைத்துக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார நேற்று (02) இரவு தீ வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.