வவுனியாவில் இரு மாதங்களில் பெரியளவில் கு ற்றச் செயல்கள் இடம்பெறவில்லை : பிரதி பொலிஸ் மா அதிபர்!!

523

பிரதி பொலிஸ் மா அதிபர்..

கடந்த இரு மாதங்களில் வவுனியாவில் பெரியளவிலான கு ற்றச் செயல்கள் எவையும் இடம்பெறவில்லை என வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் தொடர்பில் வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்த பொலிசார் சுகாதார துறையினர், படைதரப்பு மற்றும் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிருமி நீக்கி விசிறல், கொரோனா தொற்று சந்தேக நபர்களை அடையாளம் காணல், ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஊரடங்கு தளர்வின் போது நகரில் சுகாதார நடைமுறைகளை கவனித்தல், பாஸ் அனுமதி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கான விடுமுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அர்ப்பணிபுடன் மக்களதும், அரச அதிகாரிகளினதும் பங்களிப்புடன் கடமைகளை செய்கின்றனர்.

கொரோனா தொடர்பில் பொலிசார் இரண்டு வகையான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாத்தல் மற்றும் தம்மை பாதுகாத்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தே கடமையாற்றுகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வவுனியாவில் கு ற்றச் செயல்கள் எவையும் பெரியளவில் இடம்பெறவில்லை. மதுபானசாலைகள் பூட்டப்பட்டமையால் சில இடங்களில் இடம்பெற்ற கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் பொது மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களும் பொலிசாருக்கு உதவி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.