சோர்வால் தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் மீது மோதிய புகையிரதம் : 17 பேர் ப லி!!

618

தொழிலாளர்கள் மீது..

நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளிகள், சோர்வு காரணமாக ரயில் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில், ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக, தினக் கூலி தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், உண்ண உணவு இன்றி சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்ரா மாநிலத்தில், அவுரங்காபாத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி, நடைபயணமாக புறப்பட்ட தொழிலாளிகள் இரவில் உறக்க அசதியில், தண்டவாளத்தில் படுத்துறங்கி உள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில், அவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டரில், “மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் விபத்து குறித்து பேசினேன்.

அவர் நிலைமையை கண்காணித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.