கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில் நிலையத்தில் புதிய இயந்திரம்!!

645

ரயில் நிலையத்தில்..

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் புதிய கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளினதும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்வதற்காக பொருத்தமான வெப்ப உணர்திறன் கேமரா கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவின் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பணிக்கு செல்லும் நபர்களின் உடல் வெப்ப நிலையை சோதனை செய்யும் கருவி ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

அங்கு வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்கள் இந்த கருவி மூலம் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் அவர்கள் சுகாதார பிரிவிற்கு அனுப்பப்படவுள்ளனர்.