கிணற்றில் தவறி வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பலி!!

620

கிணற்றில் தவறி வீழ்ந்து..

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள கிணறொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்தமானது நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உ யிரிழந்தவர்கள் 3 மற்றும் 6 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.

இரண்டு சிறுவர்களின் சடலங்களும் நேற்று மாலை மீட்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அப் பகுதியை சுற்றிவைளத்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.