மேலாடை இல்லாமல்..
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வகை பழங்குடியின பெண்கள் இன்று வரை மேலாடை இல்லாமல் வாழ்ந்து வருவது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல வகை பழங்குடியினர் இருக்கின்றனர். இதில், ஓடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் போண்டா பழங்குடியின மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் பேசும் மொழிக்கு போண்டா என்ற பெயரால் இந்த இந்த இன மக்களுக்கும் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களையே ரேமோ என அழைத்துக்கொள்வார்கள். போண்டா மொழியில் ரேமோ என்றால் அதற்கு மக்கள் என அர்த்தம்.
இதிலும் இரண்டு பிரிவுகளாக இவர்கள் இருக்கிறார்கள். கீழ் போண்டா மற்றும் மேல் போண்டா, இதில் மேல் போண்டா குடிமக்கள் என்பவர்கள் காட்டிற்குள்ளேயே வாழ்பவர்கள் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் ஊருக்குள் வரமாட்டார்கள்.
சிறு வயது முதலே காட்டிற்குள் தான் இருக்கிறார். அவர்களை சாதாரண மக்களால் எளிதாக பார்க்க முடியாது. கீழ் போண்டா மக்கள் நம் நாட்டில் உள்ள பழங்குடின மக்கள போலவே இருக்கிறார்கள்.
இன்றும் அவர்களின் மொழி கலாச்சாரம் ஆகியவற்றை மறக்காமல் தொடர்ந்து அதை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். மேல் போண்ட மக்கள் 67,000 பேரும், கீழ் போண்டா மக்கள் 17,000 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களின் மக்கள் தொகையில் பெண்கள் தான் அதிகம். போண்டா இன மக்களை பொருத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பெண்களுக்கு கட்டாயம் மேல் ஆடை அணியக்கூடாது. இந்த கட்டாயத்திற்கு பின்னால் ஒரு ராமயணக்கதை இருக்கிறது.
ராமன் சீதையுடன் வனவாசத்திற்கு செல்லும் போது குளம் ஒன்றில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் குளிப்பதை, நிர்வாணமாக இருந்த நிலையில், போண்ட இன பெண்கள் பார்த்துவிட்டதால், அவர்கள் மீது கோப்பட்டு அவர்கள் வாழ் நாள் முழுவதும் நி ர்வாணமாகவும், வாழ்நாள் முழுவதும் குறைந்த முடியுடன் தான் வாழ வேண்டும் என சாபமிட்டுள்ளார்.
அதை கேட்டு அ திர்ச்சியடைந்த போண்டா இன பெண்கள் சீதையிடம் மன்னிப்பு கேட்கின்றனர். இதையடுத்து, சீதை மனம் இறுங்கி அவரது சேலையலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களிடம் கொடுத்து இதே அளவு உள்ள ஆடைகளையே இனி இவர்கள் அணிய வேண்டும் என தன் சாபத்தை குறைந்தார்.
அன்று முதல் போண்டா இன பெண்கள் மேலாடை அணிவதில்லை கீழாடையில் குறிப்பிட்ட அளவிலான ஆடையையே அணிகின்றனர். மேலும், இவர்கள் வேட்டையாடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், பல அணிகலங்கள் செய்து அதை போட்டுக்கொண்டு உடலை மறைந்துக்கொள்கிறார்கள். அதற்கு எந்த விதமான தடையும் இல்லை.
இந்த இன மக்களிடம் இன்றும் பண பரிமாற்ற முறை இல்லை. இவர்கள் இன்றும் பண்ட மாற்ற முறையை தான் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த இன மக்களிடையே ஒரு சந்தை ஒன்று நடக்கிறது. அந்த சந்தையில் அவர்கள் தங்களுக்குள் பொருட்களை பண்ட மாற்று முறையில் மாற்றம் செய்து கொள்கின்றனர்.
கடந்த 177-ஆம் ஆண்டு முதல் இந்த இன மக்களை ஒடிசா அரசு அடையாளம் கண்டு, அவர்களை தேவையான உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த மக்கள், தற்போது பிரிந்து பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.