வவுனியா ஊடாக பலத்த பாதுகாப்புடன் தென்பகுதி நோக்கி பயணித்த 7 பேருந்துகள்!!

528

தென்பகுதி நோக்கி..

வடபகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 7 பேரூந்துகளில் பலத்த பாதுகாப்பு மத்தியில் வவுனியா ஊடாக தென்பகுதி நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் வடபகுதியில் அமைப்பட்ட பல்வேறு முகாமிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கொரோனோ தொற்று இல்லாதநிலையில் அவர்களை 07 பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா ஊடாக இன்று (11.05.2020) மதியம் அவர்களது வதிவிடங்களுக்குஅழைத்துச் செல்லப்பட்டனர்.