இளைஞனுக்கு நேர்ந்த..
தமிழகத்தில் பெண் தோழியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் அ டித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவருக்கு கெளதம் என்ற மகன் உள்ளார். கெளதம் பொள்ளாச்சியில் இருக்கும் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் திகதி இவர், தன்னுடைய 16 வயது பெண் தோழி ஒருவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால், இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது, வெளியே சென்றிருந்த சிறுமியின் தந்தை, மாமா மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
வீட்டின் உள்ளே கெளதமைக் கண்டதும், அ திர்ச்சியடைந்த அவர்கள், ஆ த்திரத்தில் கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்களால் க டுமையாக அ டித்துள்ளனர். இதனால் ப டுகாயமடைந்த கெளதம், சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் உ யிருக்கு போராடி வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பொலிசார், கௌதமைத் அ டித்த சி றுமியின் தந்தை உள்ளிட்ட 3 பேர் மீது கொ லை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில், கௌதம் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்ததால், பொலிசார், சி றுமியின் உறவினர்கள் 3 பேர் மீதும் பதிவு செய்திருந்த கொ லை முயற்சி வழக்கை கொ லை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உ யிரிழந்த கௌதமுக்கும், சிறுமிக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் எல்லோரும் வெளியில் சென்றுள்ளனர்.
இதனால் கௌதம், சிறுமியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேர், வெளியில் கௌதமின் செருப்பு இருப்பதைக் கண்டு ச ந்தேகித்துள்ளனர்.
பிறகு வீட்டில் வந்து தேடியபோது, கௌதம் கட்டிலுக்கு அடியே ஒளிந்துகொண்டிருந்துள்ளார். ஆ த்திரமடைந்த மூவரும் கௌதமை சரமாரியாக அ டித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.