கோவிட் – 19 ஆரம்ப பரிசோதனை..
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தருபவர்கள் கோவிட் -19 வைரஸ் தொற்று ஆரம்ப பரிசோதனைக்கு பின்னரே மாவட்ட செயலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் ஆலோசனைக்கமைய இக் கருவியின் மூலம் மாவட்ட செயலகத்தினுள் வருகை தரும் ஊழியர்கள், சேவையினை பெறுவதற்கு வருகை தருபவர்கள் அனைவரும் குறித்த பரிசோதனையின் பின்னரே மாவட்ட செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.