இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர உட்பட அதிதிகள் அழைத்து வரப்படுட்டு நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வவுனியா அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.