மக்களின் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை : பொலிஸார்!!

444

மக்களின் செயற்பாடுகள்..

மக்களின் செயற்பாடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நடவடிக்கைகளின் போது பொது மக்களினால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தி கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அகேமான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதுடன் அரச தனியார் தொழிற்துறை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-