காதல் ஜோடி..
திருவெறும்பூர் ஒன்றிய திமுக மகளிரணி நிர்வாகியாக ராதா புலிகேசி இவரது மகள் காருண்யா (22) இவர் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வீரமணி (24) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார். காருண்யா எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வரும் டாக்டர். வீரமணி வேன் ஓட்டும் டிரைவர்.
இந்த நிலையில் வீரமணி காருண்யா காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 1ம் தேதி சமயபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் ராதா புலிகேசி தனது மகள் காருண்யாவை கா ணவில்லை என புகார் செய்தார் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வி சாரனை செய்துவந்தனர். இந்த நிலையில் வீரமணியும் காருண்யாவும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் பெண்ணின் தந்தை தன்னுடைய மகளை விட்டுக்கொடுக்க மனம் இல்லாததால், தன் மகளை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச்செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால் தன் காதல் மீது உறுதியாக இருந்த பெண் மருத்துவர், பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இறுதியில், காருண்யா வீரமணி உடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.