பொது மலசல கூடத்தினால்..
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள நகரசபை பொது மலசல கூடத்தினால் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மலசல கூடம் எச்சில் துப்பல்கள், குப்பைகள் , புகையிலை மிகுதி துண்டுகள் போன்றவற்றினால் அசுத்தமான முறையில் காணப்படுவதினால் குறித்த மலசல கூடத்தினை உபயோகப்படுத்துபவர்களினால் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதுற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அண்மையில் வீதியில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்திருந்த போதிலும் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் இவ்வாறு எச்சில் துப்பல்கள், அழுக்காக காணப்படும் குறித்த நகரசபை பொது மலசலம் கூடம் தொடர்பில் நகரசபை கவனம் செலுத்துமா என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 வைரஸ் தாக்கம் எச்சில் மூலம் பரவும் என வைத்தியர்கள் தெரிவிக்கும் நிலையில் வவுனியா நகரசபை பொது மலசல கூடத்தினால் கோவிட்-19 வைரஸ் மக்களிடையே பரவுமா?
குறித்த நகரசபை மலசல கூடத்தில் அங்கவீனர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மலசலகூடமும் பாவனைக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.