வவுனியா பிரதேச செயலக அணி சுதந்திர தின மென்பந்து சுற்றுப் போட்டிக் கிண்ணத்தை கைப்பற்றியது!!(படங்கள்)

302

66 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக் கிடையிலான மென்பந்து சுற்றுப்போட்டியொன்றை மாவட்டசெயலகம் நடாத்தியிருந்தது. இந்த நிகழ்வின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நேற்று (04) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலில் அரையிறுதிக்காக வவுனியா மாவட்ட செயலக அணியும், வெங்கலசெட்டிகுள அணியும் களமிறங்கியது. இதில் வவுனியா மாவட்ட செயலக அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியது.

அடுத்த அரையிறுதிக்காக வவுனியா பிரதேச செயலக அணியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச செயலக அணியும் களமிறங்கியது. இதில் வவுனியா பிரதேச செயலக அணி இறுதி சுற்றுக்கு தெரிவாகியது.

இறுதிப்போட்டியில் வவுனியா மாவட்ட செயலக அணியை 8 விக்கற் வித்தியாசத்தில் வவுனியா பிரதேச செயலக அணி மிகவும் கடுமையான போட்டிக்கு மத்தியில் வெற்றி கொண்டு 66 வது சுதந்திரதின வெற்றிக் கேடயத்தை தனதாக்கி கொண்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இன் நிகழ்வுக்கு வவுனியா அரசாங்க அதிபர், வவுனியா பொலிஸ்மாதிபர், வவுனியா இராணுவ தலமையதிகாரி, பிரதேசசெயலாளர்கள் மற்றும் பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

11 12 13 14 15 16 17