வவுனியாவிற்கு கொழும்பில் இருந்து வந்த 11 பேர் சுய தனிமைப்படுத்தலில்!!

597

சுய தனிமைப்படுத்தல்..

கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த 11 பேர் அவர்களது வீடுகளில் இன்று (16.05.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தொழில் வாய்ப்பு மற்றும் வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பு சென்று கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு சட்ட நடைமுறை காரணமாக வவுனியாவிற்கு வர முடியாத நிலையில் இருந்த 11 பேர் கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொண்ட நிலையில் பொலிசாரால் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த 11 பேரையும் பார்வையிட்ட சுகாதாரா பரிசோதகர்கள் பா துகாப்பு கருதி அவர்களை 14 நாட்கள் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதற்கமைவாக அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.