சீரற்ற வானிலை : நேற்று மட்டும் மூவர் உயிரிழப்பு!!

488

சீரற்ற வானிலை..

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நேற்று மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை மக்கோனவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அனுராதபுரத்தில் உள்ள கஹடகஸ்கிரிய பகுதியில் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் மற்றொரு நபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் 10 மாவட்டங்களுக்கு விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை மீள் அறிவிக்கப்படும் வரை அமுலில் இருக்கும் என்று கொடிப்பிலி கூறியுள்ளார்.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மாத்தளை, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.