புதிய 35 கொரோனா நோயாளிகள் தொடர்பான விபரம்!!

515

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் நேற்று மாத்திரம் புதிதாக 35 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1027ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 35 பேரும் கடற்படை சிப்பாய்கள் என தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 586 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 569 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 209 பேர் கடற்படையினராகும். தொற்றுக்குள்ளாக 445 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.