வவுனியாவில் பலத்த காற்றில் பழமைவாய்ந்த மரம் முறிந்து வீழ்ந்தது!!

766

பலத்த காற்றின் காரணமாக..

வவுனியாவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக புகையிரத நிலைய வீதியில் வீதியோரத்தில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தது.

இன்று (21.05.2020) மதியம் 2.00 மணியளவில் வீசிய காற்றின் காரணமாக பழமை வாய்ந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சார இணைப்பு பாதிப்படைந்துள்ளது.

முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றும் பணியில் அப்பகுதி மக்கள் , வர்த்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.