கடந்த ஓராண்டில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள், 726 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பிரினீத் கவுர் லோக்சபாவில் எழுத்துப் பூர்வமாக அளித்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்காக, இலங்கை மற்றம் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், கடந்த ஓராண்டில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 726 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2014 ஜனவரி 31 ம் திகதி நிலவரப்படி இலங்கை சிறையில் 38 இந்திய மீனவர்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். பாக். சிறையில் 232 இந்திய மீனவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.