பயணிகள் கவனத்திற்கு : விமானப் பயணங்கள் இனி எப்படி இருக்கப் போகின்றன?

458

விமானப் பயணங்கள்..

கொரோனா தொற்று தணியாத நிலையில், கொரோனா உயிர்கொல்லி வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பயணிகள் விமானசேவைகள் ஆங்காங்கு சில நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த விமான சேவைகள் நிச்சயமாக முன்னரைப் போல் இருக்கப் போவதில்லை.

சமூக இடைவெளி பேணப்பட்ட நிலையில், தகுந்த பாதுகாப்புடன்- அதேவேளை நிறைந்த பயணிகளுடன்தான் எதிர்காலத்தில் விமான சேவைகள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதுகாப்புடன் கூடிய தங்களது விமான சேவைகள் எவ்வாறு இருக்கும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, எதிர்காலத்தில் விமானப் பயணங்கள் எவ்வாறு இருக்கப்போகின்றன என்பதை கட்டியம் கூறுவதாக இருக்கின்றது..