கசிப்பு ஸ்பிறிட்..
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாரால் இன்று (25.05.2020 கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா, பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக பிரியந்த அவர்களின் வழிகாட்டலில் பிராந்திய போ தை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி வி.என்.மாரசிங்க தலைமையில்,
உப பொலிஸ் எஸ்.பி.சுபசிங்க, சார்ஜன்ட் (35885) ஜயந்த, கொன்ரபிள்களான (82663) பிரசாத், (85081) லலித், (37760) சமீதரன், (80721) நளிந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் கோவில்புதுக்குளம் 7 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றினை சோ தனை செய்த போது விற்பனைக்கு தயாராக இருந்த 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அது பொலிசாரால் மீட்கப்பட்டது.
இதனை உடமையில் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் குறித்த வீட்டில் வசித்த 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வி சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.