வவுனியா நகரில் நீண்ட நேரம் உயிருக்கு போ ராடிய மாடு : அசமந்தமாக செயற்பட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள்!!

947

வவுனியா நகரில்..

வவுனியா நகரில் விபத்துக்குள்ளாகி நீண்ட நேரமாக உயிருக்கு போ ராடிய பசு மாட்டினை கா ப்பாற்றாது கால்நடை வைத்திய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, பூட்சிற்றி முன்பாக தாய் பசு ஒன்று இரவு விபத்துக்குள்ளான நிலையில் கா யத்துடன் வீதியோரத்தில் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தது. அதன் கன்று அதன் அருகில் நின்று தாயை நினைத்து த வித்துக் கொண்டிருந்தது.

இதன்போது அங்கு சென்ற நகரசபை உறுப்பினர் பி.யானுஜன் குறித்த மாட்டினை பார்வையிட்டு இது தொடர்பில் வவுனியா கால்நடை வைத்தியர்களிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

அவர்கள், மாட்டின் உரிமையாளர் வந்தால் மட்டுமே மாட்டிற்கு சிகிச்சையளிக்க முடியும் எனத் தெரிவித்து அலட்சியப் போக்குடன் பதிலளித்தனர்.

இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் மாட்டினை குணப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சையளிக்குமாறு கால்நடை வைத்திய அதிகாரியிடம் மீண்டும் தொலைபேசியில் தெரிவித்தனர்.

ஆனால் உரிமையாளர் இல்லாமல் வர முடியாது எனவும் மருந்து அவர்கள் மருந்து வாங்கி வந்தால் சிகிச்சையளிக்கலாம் எனவும் கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிசார் குறித்த மாட்டின் உரிமையார் யார் என்பதை தேடி அவர்களுக்கு, நகரசபை உறுப்பினர் மற்றும் பொதுமக்களின் துணையுடன் தெரியப்படுத்தினர்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த உரிமையாளர் மாட்டினை மீட்டு கால்நடை வைத்தியரிடம் கொண்டு சென்று காட்டினர்.

அப்போது அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட மருந்தைப் பெற்று வந்து கால்நடை வைத்தியரிடம் கொடுத்தையடுத்து மாட்டிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கால்நடை வைத்தியர்களிடம் தெரியப்படுத்தி சுமார் இரண்டரை மணித்தியாலம் கடந்த நிலையில் உரிமையாளர் வந்த பின்னரே குறித்த மாட்டிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது.

கால்நடை வைத்திய அதிகாரிகள் ஒரு உ யிருக்கு கொடுக்கும் பெறுமதி இதுவா என பலரும் இதன் போது விசனம் தெரிவித்தனர்.