தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி!!

824

மாணவன்..

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்க சென்ற மாணவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உ யிரிழந்தவர் திருகோணமலை – சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நடராசா ஆதவன் என தெரியவந்துள்ளது.

நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வரும் இவர் குடும்ப கஷ்ட நிலை காரணமாக விடுமுறை காலத்தில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார். 16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது மரத்தின் கிளை அவர் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.