கிளிநொச்சி வாகன விபத்தில் வயோதிப பெண் பலி : மகள் படுகாயம்!!

536

வாகன விபத்தில்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 64 வயதுடைய வயோதிப பெண் பலியானதுடன், அவரின் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.