கொரோனாவினால் ஏற்பட்ட குழப்பம் : வைத்தியசாலையில் திருமணத்தை நடத்திய லண்டன் வாழ் இலங்கையர்!!

407

லண்டன் வாழ் இலங்கையர்..

கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக லண்டன் வைத்தியசாலையில் இலங்கையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால், திருமணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்த இலங்கை வைத்தியர் மற்றும் ஐயர்லாந்து நாட்டு தாதி ஒருவர் லண்டனில் பணிபுரியும் வைத்தியசாலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Jann Tipping என்ற தாதியும் அனலன் நவரத்னம் என வைத்தியரும், லண்டனில் உள்ள St Thomas வைத்தியசாலையில் திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அங்கிருந்த ஒருவர் இந்த திருமணத்தை நேரடி ஒளிபரப்பு செய்தமையினால் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் தூரத்தில் இருந்தே பார்வையிட்டுள்ளனர்.

அனைவரும் ஆரோக்கியமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க தீர்மானித்ததாக இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.  ஆகஸ்ட் மாதம் Tipping மற்றும் நவரத்னம் தங்கள் திருமணத்தை நடத்தவிருந்தனர்.

எனினும் ஐயர்லாந்து மற்றும் இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் கொரோனாவுக்கு மத்தியில் பயணம் செய்வதில் உள்ள ஆபத்து தொடர்பான அச்சம் காரணமாக இவ்வாறு திருமணம் செய்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.