இளைஞரொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி!!

492

நீரில் மூழ்கி..

ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி நேற்று உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா,அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன்றிஷாத் முகம்மட் (17வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவிலிருந்து ஹொரவபொத்தான பிரதேசத்திலுள்ள முக்கறவெவ பகுதிக்கு அவரது உறவினரின் வீட்டுக்கு வருகை தந்து நேற்று மாலை குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது ஹொரவபொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை ஹொரவபத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.