இலங்கை வரும் அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை!!

868

PCR பரிசோதனை..

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான பரிசோதனை கூடம் ஒன்றை விமான நிலையத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுவதற்காக வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக விமான நிலையத்தினுள் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை கண்கானிப்பதற்காக அரசாங்கத்தின் பிரதானிகள், இராணுவ தளபதி உட்பட அதிகாரிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்கானிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

PCR பரிசோதனை கூடம் ஒன்றை விமான நிலையத்தினுள் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பரிசோதனை கூடத்திற்கு அவசியமான இடவசதி வழங்குவதற்கு விமான நிலைய தலைவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

பரிசோதனை கூடம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் தலையீட்டில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.