மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டாவால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

1856

7 மாத கர்ப்பிணி..

தமிழகத்தில் மரம் அ றுக்கும் இயந்திரத்தில் சி க்கிய கர்ப்பிணி பெண், ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். மரம் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தர்மராஜிற்கு கல்பனா என்ற மனைவி உள்ளார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் கல்பனா, குறித்த தொழிற்சாலைக்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு டீ கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதுமட்டுமின்றி அங்கு தன்னால் இயன்ற சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். அதன் படி சம்பவ தினத்தன்று, கல்பனா வழக்கம் போல் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது எதிர்பாரதவிதமாக, அவரின் துப்பட்டா, மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிவிட, சட்டென கல்பனாவை இழுத்த மரம் அறுக்கும் இயந்திரம், அவரின் த லையை து ண்டாக்கியது. இதனால் கல்பனா சம்பவம் இடத்திலே ப ரிதாபமாக இ றந்தார்.

அதன் பின் இது குறித்து சூலூர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இயந்திரத்தில் மரத்தை வெட்டும் பகுதி திறந்து வைக்கப்பட்டிருந்ததே வி பத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.