வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (06.02) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக திரு.வ.செல்வராசா (வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா(வலயக் கல்விப் பணிப்பாளர் -வவுனியா தெற்கு) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.A.M.பாலித அபயசிங்க (பொறுப்பதிகாரி -செட்டிகுளம் பொலிஸ் நிலையம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், பிரதேச முக்கிய பிரமுகர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.