ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்காக ஒப்பாரி வைக்க பெண்களுக்கு பயிற்சி? வெளியாகியுள்ள காணொளி!!

1683

ஒப்பாரி..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்காக ஒப்பாரி வைக்க பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

“தொண்டமான் ஐயா சென்று விட்டார்” என கூறி ஒப்பாரி வைக்குமாறு ஒரு நபர் வீதியில் அமர்ந்துள்ள பெண்களிடம் கூறுகின்றார். இதனை தொடர்ந்து பெண்கள் பலர் இணைந்து ஒப்பாரி வைத்து அழுவது என அந்த காணொளியில் காட்சிகள் காணப்படுகின்றன. இது தொடர்பான செய்தி சிங்கள ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.

பகிரப்படும் பதிவில் இப்படி குறிப்பிட்டிருந்தாலும், அந்த பெண்கள் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானினுக்கு இறுதி அஞ்சலி செலத்தும் வகையில் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.