சஹன் குமார விவகாரம் : இரண்டு ஆண்டுகள் கடந்தும் நீடிக்கும் மர்மம்!!

620

சஹன் குமார..

பலாங்கொட பகுதியில் சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் கா ணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், சிறுவன் தொடர்பில் புலனாய்வுத்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் கா ணாமல் போனமை தொடர்பில் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அந்த பகுதியில் தீவிர தே டுதலை நடத்தியிருந்தனர். எனினும், சிறுவன் குறித்த தகவல்கள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. இதனையடுத்து, இராணுவம் பின்வாங்கியது. வி சாரணைகள் கு ற்றப் பு லனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் சிறுத்தைக்கு ப லி ஆகினானா? அல்லது புதையல் வேட்டை அல்லது வேறு ஏதேனும் கு ற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வி சாரணை நடந்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, விறகு வெட்டுவதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்ற தந்தையை தேடி சென்ற சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் மீண்டும் வீடு தி ரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.