பொலன்னறுவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

791


விபத்தில்..



பொலன்னறுவை, பக்கமுன பகுதியில் இன்று (02.06.2020) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் படைத்தரப்பை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.



இவர்கள் இருவரும் பயணம் செய்த மோட்டார்சைக்கிள், எதிரே பயணித்த பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இரண்டு படையினரும் 27 மற்றும் 28 வயதை கொண்டவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.




சம்பவத்தையடுத்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.