லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழப்பு!!

853

விபத்து..

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின், வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்திற்கு இலக்கானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்து கொண்டிருந்த லொறியே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே உ யிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.