மயானத்திற்கு சென்று தாய் – தந்தை செய்த செயல் : மகனால் நடந்த விபரீதம்!!

1867

தாய் – தந்தை செய்த செயல்..

மதுரையில் மயானத்திற்கு சென்ற வயதான தம்பதியினர் கை, மற்றும் க ழுத்தை அ றுத்து த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் சுடுகாட்டுக்கு அருகில் சாலையோரம் வயதான தம்பதியினர் இருவர் ர த்த வெ ள்ளத்தில் உ யிருக்கு போ ராடுவதாக கொட்டாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக 108 ஆம்புலன்சுடன் சம்பவ இடத்துக்குசென்ற அதிகாரிகள் உ யிருக்கு போ ராடிய மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே உ யிரிழந்த முதியவரை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கம்புனரியை சேர்ந்த பாண்டியராஜன்- கமலம் தம்பதியினர் என தெரியவந்தது.

இவர்களது மகன் சதீஷ்குமார், பாலிடெக்னிக் ஒன்றில் பணியாற்றி வருகிறார், கடந்தாண்டு ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இவரது மகள் சுகந்தி, கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் ஊரடங்கால் வேலையிழந்த மருமகன், சீர்கேட்டு சுகந்தியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர், சதீஷ்குமாரிடம் உதவும்படி கேட்டுள்ளனர், ஆனால் அவரோ தகாத வார்த்தைகளில் பேசியதுடன் வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த தம்பதியினர் சுடுகாட்டிலேயே உயிரை மாய்த்துக்கொள்வதென முடிவெடுத்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.