நைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்–ஒக்வுடு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக ஒனித்ஷா பொலிசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையில் 2 மனித தலைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மனிதர்களை கொன்று இறைச்சி சமைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். எனவே ஹோட்டல் உரிமையாளர், 6 பெண் ஊழியர்கள், 4 ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.