2015ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களுக்கு மேலதிகமாக செவிமடுத்தல் மற்றும் பேச்சு ஆகிய இரண்டு விடயங்களுக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.
இதற்காக 20 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.