ஊடரங்கு சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல் : கட்டுப்பாடுகள் விதிப்பு!!

2323

ஊடரங்கு சட்டம்..

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை முதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரை இந்த நடைமுறை தொடரும் என சற்று முன்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வார இறுதி நாட்களில் முழு நாளும், ஏனைய நாட்களில் இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.