வடக்கில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!!

1657

வெட்டுக்கிளி..

தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் வட மாகாண விவசாயிகள் அ ச்சமடையத் தேவையில்லை என வட மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் s.சிவகுமார் அறிவித்துள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது உண்மையில் கூடியளவு சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு இனமாகும்.

அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம எனுமிடத்தில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. இதை நாங்கள் எமது விவசாயத் திணைக்களம் மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பரிசோதித்தோம்.

இது ஒரு மஞ்சள் புள்ளிகள் கொண்ட ஒருவகை வெட்டுக்கிளி என அறிவித்திருந்தார்கள். இது வழமையாக இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளி இனமாகும். பாலைவன வெட்டுக்கிளியல்ல.

இது தொடர்பில் மக்கள் அ ச்சமடையத் தேவையில்லை. எனினும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரிய சே தத்தை ஏற்படுத்தக் கூடியவை.

இந்த அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளால் வட மாகாண விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும் அதனை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

இவ்வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அ ச்சமடைய தேவையில்லை. இது தொடர்பில் பத்திரிகை வாயிலாகவும் மத்திய விவசாய திணைக்களத்தினரும் வெளியிட்டுள்ளார்கள்.

குருநாகல் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே காணப்படுகின்றது. தற்போது இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் நாங்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டும்.

பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் வந்தால் அதனை கட்டுப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பாலைவன வெட்டுக்கிளிகள் வட மாகாணத்தில் இதுவரை இனங்காணப்படவில்லை.

அதாவது யாழ். மாவட்டத்தில் குப்பிளான் பகுதியில் ஒரு ஆலயத்திற்கு பின்னால் உள்ள ஒரு செடியில் பத்து பதினைந்து வெட்டுக்கிளிகள் இனங்காணப்பட்டன.

எனவே இந்த விடயம் தொடர்பில் அங்குள்ளவர்கள் உடனடியாக விவசாய திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு நாம் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டபோது அது இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளிதான்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. பத்திரிகைகள் மூலம் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் பற்றி கேள்விப்பட்டு அ ச்சத்தின் காரணமாக விவசாயிகள் எமக்கு தெரியப்படுத்தினார்கள்.

அதேபோல வவுனியா மாவட்டத்திலும் இனங்காணப்பட்டன. எனவே அவை அனைத்தும் இலங்கையில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகள் தான். அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. எனவே வடக்கு மாகாண விவசாயிகள் இந்த பாலைவன வெட்டுக்கிளி தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.

எனினும் நாம் முன்னாயத்த நிலையில் செயற்பட வேண்டும். அதாவது விவசாயிகள் இந்த வெட்டுக்கிளி தொடர்பான விடயங்களை விவசாய திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே எமது விவசாய போதனா ஆசிரியர்கள் ஊடாக குறித்த வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளியை அல்லது எமது நாட்டில் உள்ளவெட்டுக்கிளியா என்பதை சோதித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

பாலைவன வெட்டுக்கிளிகள் அனைத்தையும் உண்ணக்கூடியவை. ஒரு பயிரிலுள்ளஅனைத்தையும் உண்ணக்கூடியவை. விவசாயிகளின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் எமக்கு அவசியமானது.

இலங்கையில் அதிலும் வட மாகாணத்தில் குறிப்பாக தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளியின் பாதிப்பு என்பது இல்லை என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.