பிரசவ வலியுடன் ஆம்புலன்சிலேயே உ யிரைவிட்ட கர்ப்பிணிப் பெண் : மருத்துவமனைகளால் நேர்ந்த கொ டூரம்!!

937


பிரசவ வலியுடன்..



உத்திரபிரதேசத்தில் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆம்புலன்சிலேயே உ யிரைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.



நொய்டா- காஸியாபாத் எல்லையில் இருக்கும் கோடா என்ற காலனி பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஜேந்திர சிங்- நீலம். நீலம் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில் தன் வீட்டுக்கு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.




தற்போது ஊரடங்கு காலத்திலும் தொலைபேசி வாயிலாக மருத்துவர்களை தொடர்பு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நீலமுக்கு திடீரென பி ரசவவ லி வந்துள்ளது, இதனால் அருகிலிருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


அவர்களோ இங்கு இடமில்லை என திருப்பி அனுப்ப 8 மருத்துவமனைகளில் ஏறி இறங்கியுள்ளனர், சுமார் 13 மணிநேர போ ராட்டத்துக்கு பின்னர் ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கே வென்டிலேட்டவர் வைக்கும் போது நீலம் ஏற்கனவே இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் ப ரபரப் பான நிலையில் உரிய வி சாரணை நடத்தப்படும் என கௌதம புத்தாநகர் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் தெரிவித்துள்ளார்.