யாழ் பூநகரியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழப்பு!!

1071

கோர விபத்து..

யாழ் பூநகரி பகுதியில் இன்று(08.06.2020) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சில்லுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்குண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.