ஜனாதிபதி கோட்டாபயவின் விசேட உத்தரவு!!

2407

விசேட உத்தரவு..

அரச கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தமது அரசாங்கம் நியமித்துள்ள பிரதானிகள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினர்கள் எவரும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்காகவும் அரசியலில் பணிகளில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் பிரதானிகள் அல்லது பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளில் எவருக்காவது ஏதேனும் அரசியல் கட்சிக்காக அரசியலில் ஈடுபடும் தேவை இருந்தால், அவர்கள் சட்ட ரீதியாக பதவியில் இருந்து விலகிச் சென்று அதனை செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களின் பிரதானிகளும், அதிகாரிகளும் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்கவில்லை. அரச அதிகாரிகள் தாமம் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் வினைதிறன், ஊழலின்மை, பலாபலன்,

ஒழுக்கம் ஆகியவற்றை பேணி, நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும். பொது மக்களின் பணத்திலேயே அரச நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இதனால், அரச நிறுவனங்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள் என்பன அரசுக்கு சொந்தமான வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்களையோ, நிதியினையோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியின் அரசியல் வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.

இந்த உத்தரவை மீறும் அரச நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.