ஜனாதிபதி கோட்டாயவின் மற்றுமொரு தீர்மானம் : தனியார் பேருந்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

812

பேருந்தில் ஏற்படவுள்ள மாற்றம்..

தனியார் பேருந்துகளுக்கு தனியான ஒரு நிறத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நாள் ஒன்றுக்கு 7 மரணங்கள் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவற்றில் அதிகளவானவை தனியார் பேருந்துகளால் ஏற்படுகின்றன. இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்தி விபத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை போன்றே தனியார் மற்றும் பாடசாலை பேருந்துகளுக்கும் தனியான நிறம் இருப்பது அவசியமாகும் ன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பிற்காக சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றி ஆசனங்களுக்கு மாத்திரம் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.