யாழில் யுவதிகள் இருவரை க டத்த முயற்சி!!

917

யாழில்..

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்று மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து க டத்த முயன்றுள்ளது.

இதன்போது க டத்த முற்பட்டவர்களிடம் இருந்து பெண் ஒருவர்
தப்பித்து வந்து மக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸில் ச ரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பகுதியில் இருந்து பெண்கள் இருவர் கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இருவரை சந்திக்க வந்துள்ளனர். இதன்போது இரு பெண்களையும் கொடிகாமம் பகுதியில் இருந்து மாசேரி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அவ்வேளை குடத்தனை பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் குழுவொன்று அப்பெண்களை க டத்திச்செல்ல முற்பட்ட வேளை ஒரு பெண் அ வலக் கு ரல் எழுப்பியவாறு அப்பகுதியில் த ப்பி பா துகாப்பு கோரி கொடிகாமம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு ச ரணடைந்த பெண் பொது மக்களின் உதவியோடு பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கொடிகாமம் பொலிஸாரும், பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மற்றைய பெண், காதலர்கள் என்று கூறப்படும் இருவர் மற்றும் க டத்தல் சந்தேக நபர்கள் உள்ளிட்டோரை வலைவீசித் தே டி வருகின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரும் குறித்த பெண்கள் இருவரையும் திட்டமிட்டு அழைத்து, இவ்வாறு ஏனையோருடன் இணைந்து இந்த க டத்தல் முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.