வீதியோரத்தில் நின்ற வான் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து : மூன்று பேர் தப்பியோட்டம்!!

698

விபத்து..

அம்பாறையில் வீதியோரத்தில் தரித்து நின்ற வானொன்றின் மீது மிக வேகமாக வந்த முச்சகக்கரவண்டி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தவர் காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த மேலும் இரு இளைஞர்களும் அவருடன் இணைந்து தப்பி சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற மூன்று இளைஞர்களையும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.