வெளிநாட்டில் கணவன் உ யிரிழந்த அடுத்த நாளே குழந்தை பெற்றெடுத்துள்ள இளம்பெண்!!

11339

அதிரா…

துபாயில் வசிக்கும் கணவர் உ யிரிழந்த அடுத்த நாளான இன்று இந்தியாவில் உள்ள அவர் மனைவி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் நிதின் சந்திரன் (28). இவர் மனைவி அதிரா. இருவரும் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அதிரா கடந்த மாதம் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பிரசவத்துக்கு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அதன்படி கடந்த மே மாதம் 7ஆம் திகதி கேரளாவின் கோழிகோடுக்கு விமானத்தில் வந்தார். ஆனால் அவர் கணவர் நிதின் துபாயிலேயே இருந்தார்.

இந்த நிலையில் உயர் இர த்த அ ழுத்தம் மற்றும் இதயநோயால் பா திக்கப்பட்டிருந்த நிதின் நேற்று தூக்கத்திலேயே மாரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.

இந்த தகவல் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் மனைவி அதிராவிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சற்று முன்னர் அதிராவுக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ள்து.

ஆனாலும் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு கணவர் மரணம் குறித்து யாரும் இன்னும் கூறவில்லை. இதனிடையில் நிதினுக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அவருடைய உடல் சொந்த ஊருக்கு புதன்கிழமை கொண்டு வரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.