வெளிநாட்டில் கணவர் இறந்த அடுத்தநாள் தாயான இளம்பெண் : சொந்த ஊருக்கு வந்த உடல்!!

1372


சொந்த ஊருக்கு வந்த உடல்..



வெளிநாட்டில் உ யிரிழந்த கணவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று குழந்தை பெற்றெடுத்த அவர் மனைவி கணவரை இறுதியாக தொட்டு கூட பார்க்க முடியாத சூழலுக்கு ஆளானது பலரின் மனதை கலங்கடித்துள்ளது.



கேரளாவை சேர்ந்த தம்பதி நிதின் சந்திரன் (28) மற்றும் அதிரா (27). இருவரும் துபாயில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர்.




இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அதிரா கடந்த் மாதம் பிரசவத்துக்காக இந்தியா வந்த நிலையில் அவர் கணவர் நிதின் துபாயிலேயே இருந்தார்.


நிதின் இதயநோயாளி ஆவார், அதற்கான சிகிச்சையை எடுத்து வந்த அவர் கடந்த 8ஆம் திகதி தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் கர்ப்பிணியான அதிராவிடம் இந்த தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த சூழலில் நிதினின் உடல் இன்று சிறப்பு விமானத்தில் சொந்த ஊருக்கு வந்தது. இதையடுத்து கணவர் இறப்பு குறித்து அதிராவிடம் உறவினர்கள் கூறினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அதிராவுக்கு இரத்த கொதிப்பு அதிகமானது.


பின்னர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர், ஏற்கனவே நிதின் ஏன் தனக்கு போன் செய்யவில்லை, எனக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டும் அவர் போன் செய்யாதது ஏன் என அதிரா சந்தேகப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வரப்பட்ட நிதின் உடல் அருகே வீல் சேரில் அதிரா கொண்டு வரப்பட்டார்.

கணவரை தொட முடியாமல் அவர் கலங்கியது பலரின் மனதை உருக்கியது. இதன்பின்னர் நிதின் உடல் குடும்ப வழக்கத்தின் படி தகனம் செய்யப்பட்டது.