நொடிபொழுதில் செய்த தவறால் கேள்விகுறியான இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை!!

649

செய்த தவறால்..

தமிழகத்தில் கொ லை வழக்கில் கைதான இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோடு, அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வருண்ராஜ் (26), ராணிப்பேட்டை வக்கீல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (23).”

இருவரும், கடந்த மே மாதம் ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் இ ளைஞனை கொ லை செய்த வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு இ ளைஞர் கொ லை தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார்.

அதைத்தொடர்ந்து வருண்ராஜ், ராஜசேகர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களால் சிறையில் இருந்து எளிதாக வெளியில் வரமுடியாது, ஒரு வருடம் சிறையிலேயே இருவரும் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதனால் இளம்வயதிலேயே இரு இளைஞர்களின் வாழ்க்கையும் கேள்விகுறியாகியுள்ளது என அவர் வசித்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.